மனத்தை ஒருநிலைப்படுத்துதலும் அடையும் நன்மைகளும்
மனத்தை ஒருநிலைப்படுத்துவதால் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது. இறைவழிபாடு, தினசரித் தியானம் ஆகியவற்றால் மனத்தை எவ்வாறு ஒருநிலைப்படுத்தலாம் என்பதற்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது. இதற்காக திருக்குறள், திருமந்திரம், சீவகசிந்தாமணி மற்றும் சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோரின் பாடல்கள் போன்றவற்றில் இருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டு இருக்கின்றன. கிறிஸ்தவர்களின் புனித நூலை மேற்கோள்காட்டும்போது, மதங்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும், அவை சொல்லும் தெய்வீக உண்மைகள் ஒன்றுதான் என்பதையும் வலியுறுத்துகிறது. மனம் தொடர்பான ஆழமான கருத்துகள் இலகுவாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் தரப்பட்டு இருப்பதால், இந்த நூல் அனைவருக்கும் பயனளிக்கும்.
Reviews
There are no reviews yet.