இனி எல்லாம் நலமே
பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனை வருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின்பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், கருவுற்றிருக்கும் மனைவிக்கு ஏன் எதையும் பிடிப்பதில்லை, பேரக் குழந்தைகள் எடுக்கும் வயதில் அம்மாவை ஆட்டிப்படைக்கும் கவலை என்ன என்று நம்மில் பலருக்கும் பல்வேறுவிதமான கேள்விகளும் குழப்பங்களும் எழலாம். அவற்றுக்குப் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
Reviews
There are no reviews yet.