‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முறைதான் எழுதுகிறான். படிக்கிறவனும் ஒரு முறைதான் படிக்கிறான். ஆனால், பாடம் நடத்துகிறவன்தான் தினம்தினம் அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான். இருபது, முப்பது வருடங்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்கிறவனுக்கே அன்பில்லை. இதுதான் இலக்கியத்தின் தோல்வி என்று நான் நினைக்கிறேன். அன்பற்றவர்கள் வகுப்பறைகளிலும், கருணையற்றவர்கள் கோயில்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அன்பைப் பற்றி, கருணையைப் பற்றி. உலகில் அதிகமாகப் பொய் பேசப்படும் இடங்கள் வகுப்பறையும் கோயிலும்தான்…’
Reviews
There are no reviews yet.