பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முதல் வீரரான நெற்கட்டும் செவ்வலின் தலைவர் பூலித்தேவரிடம் தளபதியாக இருந்த வெண்ணிக் காலாடியின் வரலாறாக இந்த நாவல் அமைந்து இருக்கிறது. மதுரை அருகே மக்களை அச்சுறுத்திய புலியை பூலித்தேவர் கொன்றது எப்படி, நெற்கட்டும் செவ்வல் கோட்டை எவ்வாறு கட்டப்பட்டது என்ற தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மருதநாயகம், ஆங்கிலேய தளபதி ஹீரான் ஆகியோர் தலைமையிலான படையுடன் நடந்த போரின்போது, வெண்ணிக் காலாடி வெட்டப்பட்டதால், குடல் சரிந்த நிலையில், குடலை வயிற்றுக்குள் தள்ளி, தலைப்பாகையால் வயிற்றை இறுகக் கட்டி ஆங்கிலேயப் படையினரை கொன்று குவித்த வெண்ணிக் காலாடியின் வீர சாகசம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
Reviews
There are no reviews yet.