மாணவன் ஆசிரியரான கதை!
குழந்தைகளின் உலகத்தை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேய், பூதம் கொண்டு படைக்கும் கற்பனை கதையல்ல. மொத்தம், 23 தலைப்புகளில் குழந்தைகள் மனதை வெளிக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கதையும், குழந்தைகள் அறிந்த, அறிய துடிப்பதை துாண்டிவிடுகிறது. குழந்தைகளின் வளர்ச்சி உலகத்தில் புகுந்து படைக்கப்பட்டுள்ளது.
நகரத்தில் வாழும் குழந்தையின் மனதை, ‘கூடி விளையாடு’ என்ற கதை பேசுகிறது. உயிர் வதை கூடாது என்ற அறத்தை உணர்த்துகிறது. பட்டாம் பூச்சி வருகை வாயிலாக, மரம் வளர்ப்பை வலியுறுத்துகிறது. தாத்தா, பேரன் உறவை, ‘கை கூடிய கனவு’ கதை மெய்சிலிக்க வைக்கிறது. நவீன உலகத்திற்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்காக எழுத துடிப்போர் வாசிக்க வேண்டிய நுால்.
Reviews
There are no reviews yet.