வாழ நினைத்தால் வாழலாம்
நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து, சுவைமிகு ரசமாக படைக்கப்பட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நம்பிக்கை, நட்பு என எந்த பக்கம் திரும்பினாலும், வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் திருக்குறள் நமக்கு ஆறுதல் தருகிறது என்பதை சொல்லியிருக்கிறார்.
உலகப் பொதுமறையான திருக்குறளை விளக்க உரையுடன் தராமல், சிறு சிறு குட்டிக் கதைகளை சொல்லி, அவற்றின் வழியே திருக்குறள் கருத்துக்களை விளக்கும் நுாலாசிரியரின் சிறப்பு போற்றத்தக்கது.
Reviews
There are no reviews yet.