அறியப்படாத கிறிஸ்தவம்
இரண்டு தொகுதிகளாக 1,272 பக்கங்களில் அமைந்துள்ள இந்த நூல், தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களின் வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறது. இந்த நூலின் ஆசிரியர், தமிழகம் முழுவதும் சுமார் ஓர் ஆண்டு காலம் பயணித்து நேரடியாகக் கள ஆய்வு செய்து திரட்டிய தகவல்களைப் படங்களுடன் தந்து இருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஆலயங்கள் பற்றிய செய்திகளையும், நாட்டார் பாடல்கள், அங்கு கடைபிடிக்கப்படும் நேர்த்திக்கடன், மதநம்பிக்கை, தைப்பொங்கல், ஜல்லிக்கட்டு போன்ற விவரங்களையும், வீரமாமுனிவர், பெஸ்கி, கால்டுவெல் போன்ற அறிஞர்கள் பற்றிய குறிப்புகளையும் தந்து இருக்கிறார். தமிழகத்தில் கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றிய முழுமையான ஆய்வு நூலாக இந்த நூல் மிளிர்கிறது
Reviews
There are no reviews yet.