நம்ப முடியாத உண்மைகள் பாகம்-2 எஸ் பி செந்தில்குமார்
மதுரை மாநகரின் பிறந்து வளர்ந்தவர் ஆன எஸ் பி செந்தில்குமார் 25 ஆண்டுகளுக்கும் மேலான பத்திரிக்கை துறையில் அனுபவம் பெற்றவர் சிறுவயது முதற்கொண்டு நூலகம் சென்று வாசிக்கும் தீவிர தேடலில் ஆர்வம் கொண்டவர்
தினத்தந்தியில் ஒரு பக்க கட்டுரைகள் உள்பட ஏராளமான ஆக்கங்களை எழுதியுள்ளார் தினத்தந்தி வெள்ளி மலரில் இவர் எழுதிய சித்தர் அற்புதம் என்ற சித்தர்கள் பற்றிய ஆன்மீக தொடர் ஒரு வருடமாக தொடர்ந்து வெளிவந்து பலராலும் பாராட்டப் பெற்றது 2003 ஆம் ஆண்டு முதல் தினம் ஒரு தகவல் என்ற தலைப்பில் தினத்தந்தியில் தொடர்ந்து தகவல்களை எழுதி வருகிறார் மேலும் யாத்திரீகன் கலாதேவி கண்மணி பிரியங்கா என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களிலும் இணையத்தில் எழுதி வருகிறார் ஹாலிடே நியூஸ் என்ற சுற்றுலா மாத இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார் இது போக யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் நடத்தி வருகிறார் இவர் எழுதிய நம்பமுடியாத உண்மைகள் என்ற நூலை தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது சுற்றுலா தொடர்பான பயண நூல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
Reviews
There are no reviews yet.